Tuesday, June 23, 2009

வண்டிக்காரன் பாட்டு

(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்)

"காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?" "எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா! 1

"நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே"-"எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!" 2

No comments:

Post a Comment